CLICK TO VISIT LATEST POSTS

Saturday, April 30, 2011

may day greetings

மே தினம் வெல்க!

அனைவருக்கும் மே தின செவ்வணக்கங்கள்

Long Live International Solidarity of the Working Class


Down with Capitalism & Imperialism

Down with Neoliberal Imperialist Globalisation

Long Live Socialism

Friday, April 29, 2011

ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தை சூதாட்டமாக்க எதிர்ப்பு ரயில்வே தொழிலாளர் வழக்கை ஏற்று தீர்ப்பாயம் முக்கிய இடைக்கால ஆணை


சென்னை, ஏப். 27-



தொழிலாளர் ஓய்வூதிய நிதியை தனியார் நிறுவனங் களின் பங்குச் சந்தை சூதாட் டப் பணமாக மாற்றும் புதிய ஓய்வூதிய சட்டத்தை எதிர்த்து ரயில்வே தொழிலாளர்கள் சார் பில் தொடுக்கப்பட்ட வழக்கை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த வழக்கு வரும் ஜூன் 1 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள் ளப்படும் என்று தீர்ப்பாயம் அறி வித்துள்ளது. இடைக்காலத் தீர்ப்பாக, பணிக்காலத்தில் உயி ரிழக்கும் தொழிலாளிகளின் குடும்பத்தினருக்கும் ஊனமுற்று வேலையிழப்போருக்கும் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட ஆதாயங்களை ரயில்வே நிர்வா கம் வழங்கியாக வேண்டும் என்றும் தீர்ப்பாயம் ஆணை யிட்டுள்ளது.



கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு அவசர அவசர மாக புதிய ஓய்வூதிய சட்டத்தை நிறைவேற்றியது தெரிந்ததே. அதன்படி, தொழிலாளர் ஊதி யத்திலிருந்து மாதந்தோறும் 10 விழுக்காடு பணம் பிடித்துக் கொள்ளப்படும். அரசுத் தரப்பி லிருந்து அதற்கு இணையான தொகை செலுத்தப்பட்டு, மொத் தத் தொகையும் ஓய்வூதிய நிதி மேலாளர்கள் எனப்படும் தனி யார் நிறுவனங்களிடம் ஒப்ப டைக்கப்படும். இதற்கு வட்டி எதுவும் கிடையாது. அந்த தனி யார் நிறுவனத்தினர் இவ்வாறு லட்சக்கணக்கான தொழிலாளி களிடமிருந்து திரட்டப்படும் நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வார்கள். பங்குச் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, தொழிலாளிக்கு அவர் ஓய்வு பெறும்போது நிதி வழங்கப் படும். அப்போது அரசியல், பொருளாதார வீழ்ச்சி, இயற் கைப் பேரிடர் போன்ற காரணங் களால் பங்குச் சந்தை சரிவ டைந்திருக்குமானால், தொழி லாளிக்கு மிக அற்பமாகவே பணம் கிடைக்கும், அல்லது இழப்பு என்று கூறி பணமே கிடைக்காமலே போகலாம்.



அப்படியே ஓய்வூதியம் வழங்கப்பட்டாலும் அதில் 60 விழுக்காடு மட்டுமே தரப் படும். மீதி 40 விழுக்காடு தொகை தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் வைப்பு நிதியாக ஒப்படைக்கப்படும். அந்த காப்பீட்டு நிறுவனங் களும் இந்த நிதியைப் பங்குச் சந்தை சூதாட்டத்தில் இறக்கி விட்டு, அதன் ஏற்ற இறக்கங் களுக்கு ஏற்பவே திருப்பித் தரும். இதனால், ஒரு தொழி லாளி மரணமடைய நேரிட் டால் அவரது ஓய்வூதிய முத லீட்டையே குடும்பத்தினர் இழக்கும் அபாயம் உள்ளது.



மத்திய அமைச்சரவை யின் ஆணைகள் மூலமாகத் திருத்தப்பட்ட விதிகளுடன் இந்தத் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. 2004 ஜன வரி 1 முதல் பணிக்கு வந்தோ ருக்கு இந்த ஆணைகள் அமலாக்கப்படும் என்றும் இவர்களுக்கு முந்தைய சட்டத் தின் ஆதாயங்கள் எதுவும் கிடைக்காது என்றும் அறிவிக் கப்பட்டுள்ளது. இவர்களில் பணிக்காலத்தில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம், இறப்புப் பணிக்கொடை, ஊனமுற்று வேலையிழப்போருக்கு ஊன முற்றதற்கான ஓய்வூதியம், பணிக்கொடை ஆகிய ஆதாயங் களும் இல்லை என ரயில்வே நிர்வாகம் ஆணை பிறப்பித்துள் ளது.



ரயில்வேயில் புதிய ஓய்வூ திய சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரியும், உயிரிழக் கிற மற்றும் ஊனமடைகிற தொழிலாளிகளுக்கான விதி களை எதிர்த்தும் தட்சிண் ரெயில்வே எம்ப்ளாயீஸ் யூனி யன் (டிஆர்இயு-சிஐடியு), ஐசிஎப்- யுனைட்டட் ஒர்க்கர்ஸ் யூனி யன் (சிஐடியு) ஆகிய இரு சங் கங்களின் சார்பில் சென்னை யில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப் பாயத்தில் இம்மாதம் 20ம்தேதி அன்று தனித்தனி வழக்குகள் (ஓஏ/575/2011, ஓஏ/576/2011) தொடுக்கப்பட்டன. இரு சங்கங் களின் சார்பில் வழக்கறிஞர் ஆர். வைகை இந்த வழக்கு களைத் தாக்கல் செய்தார்.



நீதிபதிகள் கே. இளங்கோ, ஆர். சதாபதி ஆகியோர் கொண்ட குழு இந்த வழக்குகளை ஏப் ரல் 21 அன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.



குடியரசுத் தலைவர் ஓப்பு தலுடன் ஆணைகள் வெளி யிடப்படவில்லை என்பது வழக்கு விசாரணயில் சுட்டிக் காட்டப்பட்டது. குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டு பிறப்பித்த சட்டத்தில் நிர்வாக ஆணைகள் மூலம் திருத்தங் கள் செய்திருப்பது அரசமைப்பு சாசனத்துக்கு எதிரான செயல் என்று வாதிடப்பட்டது.



செவ்வாயன்று (ஏப்.26) முதல்கட்ட இடைக்காலத் தீர்ப்பை அளித்த நீதிபதிகள் குழு, 2004 ஜனவரி 1க்கு முதல் நியமிக்கப்பட்டு உயிரிழக்கும் தொழிலாளிகள் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம், இறப்புப் பணிக்கொடை ஆகியவற்றை வழங்க ஆணையிட்டனர். ஊன முற்று வேலையிழக்க நேரிடும் தொழிலாளர்களுக்கு ஊன முற்றதற்கான ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவற்றை வழங்கவும் ஆணையிட்டனர்.



புதிய ஓய்வூதிய சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரும் மனுக்கள் ஜூன் 1 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதி பதிகள் அறிவித்தனர்.



Thursday, April 28, 2011

NEW PENSION SCHEME CHALLENGED


New Pension Scheme for railway employees challenged

The new pension scheme introduced by the Union Government for railway employees has been challenged in the Madras Bench of the Central Administrative Tribunal.

 
An employee of the southern railway and Dakshin Railway Employees Union (DREU) have challenged the scheme terming it unconstitutional and invalid.

According to the new scheme, employees appointed on or after 01.01.2004 in the Railways would be governed by the new pension scheme which would be governed by 'Pension Fund Regulatory Development Authority' which would function under the overall control of Ministry of Finance. According to the new scheme, 10% of Pay and DA of an employee would be deducted and an equal amount would be contributed by the central government.

The entire pension scheme is being authorized through various executive orders, which cannot be done to govern the retirement benefits of government employees which has to be in tune with Articles 41 to 43 of the Constitution, alleges the application. The notifications issued by the government constituting PFRDA dated 10.10.2003 and 14.11.2008 are unconstitutional, as they have not been issued by the President of India and authenticated as required under Article 77 of the Constitution and the ordnance sanctioning this also lapsed in 2005, which renders the entire process without authority of law alleges DREU in its application.

   The new pension scheme, which is mandatory to government employees curtails them from exercising any option said V. Daniel, a Helper in Southern Railway. According to the New Pension Scheme, any citizen of India can join the Scheme and they can choose their Fund Managers or opt for different schemes whereas no such option is available to government servants.

The application also raised serious apprehension over the way in which their funds are being exposed to market risk and they cite the risk clause in the offer document of the NPS which says that "there are no guarantee on investments and investments involve risks such as trading volumes, settlement risk, liquidity risk, default risk, including possible loss of principal'. The application also cited the statement of PFRDA Chairman that pension fund managers regulated by PFRDA are not giving minimum guarantee on returns in their products.

Besides seeking quashing of the notification and grant retiral benefits to all employees on par with those who joined prior to January 1994, the application sought an interim injunction against the notification and also to release family pension and gratuity to certain employees who died after the introduction of the new scheme.


The matter came up before the Madras Bench of the CAT comprising Members K. Elango and R. Satapathy. Counsel R. Vaigai advanced arguments on behalf of the DREU and highlighted how the funds of the employees are being entrusted with private players and are subjected to undue risks. She also apprised the Bench that the government as an employer cannot transfer its funds to a private player and expect him to discharge government's obligation.



After hearing the arguments on behalf of the applicant and of the central government, the Bench ordered interim relief directing the railway authorities to offer gratuity and family pension to all employees who joined after January 2004 within four weeks from the date of application and posted the matter for June 1.


வர்க்கப்போராட்டங்களுக்கு வலுவூட்டும் மாநாடு -ஏ.கே.பத்மநாபன்







                     மனிதகுல வரலாற்றில் பல்வகை சிறப்புகளைக்கொண்ட கிரேக்க நாட்டின், புகழ்மிக்க தலைநகரம் ஏதென்ஸ். சிறிய நாடானாலும், கிரேக்கத்தின் பண்டைய புகழுக்குஏற்றாற்போல், இன்றும் பல் வகை சிறப்புகளைக்கொண்டநாடு. உலகம் முழு வதும் முதலாளித்துவ நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், அந்த நெருக்கடியின் கோரவிளைவு களால் பெரிதும் பாதிப்புக்குள் ளாகியுள்ள மக்கள். இந்த நெருக்கடிகளின் விளைவுகளுக்கு எதிராக வீரஞ்செறிந்த வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள், கிளர்ச் சிகளால் உலகத் தொழிலாளர்களின் கவனத்தை ஈர்க்கும் நாடு !



                        இந்த கிரேக்க மண்ணில், தலைநகர் ஏதென்ஸில் தான் உலகத்தொழிற்சங்க சம் மேளனம் (றுடிசடன குநனநசயவiடிn டிக கூசயனந ருniடிளே-றுகுகூரு) நடத்திய 16வது உலகத் தொழிற்சங்க மாநாடு ஏப்ரல் 6 முதல் 10வரையிலும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.



மாநாட்டுப் பின்னணி

தொழிற்சங்கங்களை உலகரீதியாக ஓரணி யில் திரட்டி, பாசிசத்திற்கு எதிராகவும், ஏகாதி பத்திய, முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு எதி ராகவும் வர்க்க ரீதியான பார்வையுடனும், சமூக மாற்றத்திற்காகவும் போராடும் நோக்கோடு 1945ல் துவங்கப்பட்டது உலகத்தொழிற்சங்க சம்மேளனம். 1945 அக்டோபர் 3 முதல் 10வரையிலும் பாரீஸ் நகரில் இதன் அமைப்பு மாநாடு நடைபெற்றது. அக்டோபர்3, அமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு மிக்க பணிகள், போராட்டங்கள், ஒருமைப் பாடு இயக்கங்கள் என புரட்சிகர பாரம்பரியம் கொண்ட சம்மேளனம், உலகளாவிய தத்து வார்த்த சருக்கல் காலங்களில் முந்தைய வர்க்கப்பார்வையுடனான செயல்பாடுகளில் பலவீனங்களைக் கண்டது. 1990ம் ஆண்டு களுக்கு பிறகு, சம்மேளனப் பணிகள், பல் வகை நெருக்கடிகளைச் சந்தித்தது.

உலகளாவிய அரசியல் பலாபலங்களில் வந்த பாதகமான மாறுதல்களால், உலக முத லாளித்துவ சக்திகளின் பேராதரவோடு, சீர் திருத்தவாத தொழிற்சங்கங்களின் உலகளா விய பணிகள் ஒருமுகப்படுத்தப்பட்டன. வர்க்கப்போராட்டங்களின் வரலாறு முடிந்து விட்டது என மூலதன சக்திகள் கொக்கரிக்கத் துவங்கின. இந்த சூழ்நிலைகளின் பாதிப்பு களை 1990ம் ஆண்டு மாஸ்கோவில் நடை பெற்ற 12வது மாநாட்டில் நேரடியாக உணரும் வாய்ப்பும் எனக்கும் கிடைத்தது.

13வது, 14வது மாநாடுகள் ( டமாஸ்கஸ், புதுதில்லி) நிலைமைகளை மாற்ற உதவ வில்லை. ஆனால் கியூபாவின் தலைநகர் ஹவானாவில் 2005ல் நடைபெற்ற 15வது மாநாடு, புதிய பாதையிலான பயணத்திற்கு வித்திட்டது. கடந்த 5 ஆண்டுகள், புரட்சிகர வர்க்கப்பாதையில், சுரண்டலற்ற புதிய உலகம் எனும், ஆரம்பகால லட்சியப்பார்வையை முன் னிறுத்தி செயல்பட்ட காலமாக இருந்தது. 15வது மாநாட்டில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட, கிரேக்க நாட்டின் ‘பாமே’(ஞஹஆநு) எனும் போர்க் குணமிக்க அமைப்பைச் சார்ந்த தோழர் ஜார்ஜ் மாவ்ரி கோஸ் உட்பட்ட தலைமைக்குழுவின் பணி கள், சம்மேளனத்தின் விஸ்தரிப்புக்கும் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழி வகுத்தது.
சிஐடியுவின் இணைப்பு

அமைக்கப்பட்ட நாள் முதல் சம்மேளனத் தோடு தோழமையுடன் செயல்பட்டாலும், சிஐடியு, சம்மேளனத்துடன் இணைய வில்லை. சம்மேளனத்தின் கொள்கை நிலை பாடுகள்தான் சிஐடியு இந்த நிலையை மேற் கொள்வதற்கான காரணமாக இருந்தது.
15வது மாநாட்டுக்குப்பின் ஏற்பட்ட மாறு தல்களின் பின்னணியில் சிஐடியு, இணைப்பு பிரச்சனையை மறுபரிசீலனை செய்தது. சிஐடியுவின் சண்டிகர் மாநாட்டில் பங்கேற்ற சம்மேளனப் பொதுச்செயலாளர், சிஐடியு தலைமையுடன் விரிவாக விவாதித்தார். 2010 அக்டோபர் - நவம்பரில் சிஐடியு பிரதிநிதிகள் குழு ஏதென்ஸ் சென்று விவாதங் களைத்தொடர்ந்தது. சிஐடியுவை, உலகத் தொழிற்சங்க சம்மேளனத்துடன் இணைப்ப தென்று சிஐடியு செயற்குழு, நிர்வாகக்குழு, பொதுக்குழு என முறையாக விவாதித்து முடிவு செய்தது.

இணைப்பை உறுதிப்படுத்த, தோழர் மாவ்ரிகோஸ் மார்ச் 12 அன்று சிஐடியு தலை மையகத்துக்கு வருகைபுரிந்தார். இந்தப் பின்னணியில்தான் சிஐடியுவின் 20 பிரதி நிதிகள் கொண்ட குழு, 16வது மாநாட்டில் பங் கேற்றது.

உற்சாகப் பெருவிழா



ஏப்ரல் 6மாலையில், ஏதென்ஸ் நகரில் ஃபலீரோ காம்ப்ளக்சிலுள்ள பிரம்மாண்ட விளையாட்டரங்கில் துவக்கவிழா நடை பெற்றது. விளையாட்டரங்கின் இருப்பிடங்கள் நிரம்பி வழிய, ஏதென்ஸ் நகரின் தொழிலாளர் களும், இளைஞர்களும் அணிதிரண்டனர். சம்மேளனத்தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் தலைமையில் பிரதிநிதிகள், அரங் கிற்குள் அணிவகுத்து வர, உரக்க கோஷங் களை எழுப்பியும், பதாகைகளை அசைத்தும் வரவேற்ற நிகழ்வு உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்து சேர்ந்த பிரதி நிதிகளை பெரிதும் உணர்ச்சிவசப்படுத் தியது.



பாரம்பரிய இசைப்பாடல்களுக்குப்பின், சம்மேளனத்தின் 65 ஆண்டுகால வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பை, பிரம்மாண்ட திரைகளில் ஒளிபரப்பினார்கள்.



வர்க்கப்போராட்டம், சர்வதேச ஒரு மைப்பாடு, ஜனநாயகம்,ஒற்றுமை ஆகிய வற்றோடு, நவீன செயல்பாட்டு முறை யையும் இணைத்த கோஷங்கள் எங்கும் எதிரொலித்தன. விழாமேடையிலும், அரங்கம் முழுவதும் பன்மொழிகளில் இதே கோஷங்கள் பொறித்த பதாகைகள் நிரம்பியிருந்தன.



பங்கேற்ற பிரதிநிதிகள் பற்றிய சுருக்க மான விபரங்களை இந்தியாவிலிருந்து வந்த பெண் பிரதிநிதியொருவர் அறிவிக்க, தென் அமெரிக்க பிரதிநிதியொருவர் இரங்கல் - அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிய, சம் மேளனத்தலைவர் தலைமையில் சம் மேளனத் தலைமைக்குழு உறுப்பினர்களு டன் மக்கள் சீனத்தின் ஏசிஎப்டியு (ஹஊகுகூரு) பிரதிநிதி மற்றும் சிஐடியுவின் அகில இந்திய செயலாளர் டாக்டர் கே.ஹேமலதா உட்பட தலைமைக்குழுவினர் பொறுப் பேற்றனர்.



கிரேக்கத்தின் ‘பாமே’யின் பொதுச்செய லாளர் ஜார்ஜ் பெரோஸ் வரவேற்புரையாற் றினார். சம்மேளனத்தலைவரும் சிரியா நாட்டைச் சார்ந்தவருமான முகமது ஷாபான் அசூஸ் தலைமை உரையாற்றினார். துவக்க உரையாற்றிய பொதுச்செயலாளர், ‘ஏகாதி பத்தியத்திற்கும் மூலதனத்திற்கும் எதிராக நமது ஒன்றுபட்ட போராட்டத்தை முன் னெடுத்துச்செல்ல இந்த மாநாடு வர்க்கப் பார்வையுடன், ஜனநாயகப்பூர்வமாகவும் பகிரங்கத்தன்மையுடனும் செயல்படும்’ என் பதை தெளிவுப்படுத்தினார்.



கிரேக்க நாட்டின் துணை ஜனாதிபதி, அட்டிக் எனும் மாநிலத்தின் ஆளுனர், ஏதென்ஸ் மற்றும் பியரஸ் நகர மேயர்கள் வாழ்த்துரை வழங்கினர்.



கிரேக்க ஜனாதிபதியின் வாழ்த்துரை படிக்கப்பட்டது. வேலையின்மையும், கடுமை யான பாதுகாப்பின்மையும் நிறைந்த சூழலை கிரேக்கம் சந்தித்து வருவதாக அவரது வாழ்த் துச்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.



பிரதிநிதிகள் மாநாடு



சம்மேளனத்தலைவருடன், பல்வேறு நாடுகளைச் சார்ந்த தலைவர்களும் உள் ளடங்கிய தலைமைக்குழு ஒவ்வொரு நாளும் தேர்வு செய்யப்பட்டது.



பிரதிநிதிகள் மாநாட்டின் துவக்க நாளில் சிஐடியுவின் சார்பில் ஏ.கே.பத்மநாபன் தலை மைக்குழுவில் இடம் பெற்றார். தொடர் நிகழ்வு களில் சிஐடியு துணைத்தலைவர் சுகுமால் சென், எஸ்.தேவ்ராய் ஆகியோரும் தலை மைக்குழுக்களில் இடம்பெற்றனர்.



கடந்த மாநாட்டுக்குப்பின் நடைபெற்ற பணிகள் பற்றிய அறிக்கை ஏழு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தது. ஆங் கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், அரபு, ரஷியன், போர்த்துகீஸ் மற்றும் கிரேக்க மொழிகளில் மாநாட்டு நிகழ்ச்சிகள் உடனுக்குடன் மொழி பெயர்க்கும் வசதியும் செய்யப்பட்டிருந்தது. எவ்வித சிரமமும் இன்றி, பிரதிநிதிகள் அனை வரும் மாநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க முடிந்தது சிறப்பானதாகும்.



நடைபெற்ற பணிகள் பற்றிய அறிக்கை யின் சுருக்கம், வீடியோ காட்சியாக, பெரிய திரையில் ஒளிபரப்பினர்.



மாநாட்டின் அடிப்படை ஆவணமாக “ஏதென்ஸ் பிரகடனம்”(ஹகூழநுசூளு ஞஹஊகூ) பொதுச் செயலாளரால் முன்மொழியப்பட்டது.



இந்த பிரகடனத்தின் நகல் முன்கூட் டியே வெளியிடப்பட்டு, உலகம் முழுவது மிருந்தும் 1085 ஆலோசனைகள் கிடைக்கப் பெற்றதை குறிப்பிட்ட அவர், பிரதிநிதிகள் ஆக் கப்பூர்வ விவாதத்தின் மூலம் ஆவணத்தை வலுப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.



சர்வதேச பொருளாதார நெருக்கடி, தொழி லாளர் மற்றும் மக்கள் மீதான தாக்கங்கள், அதையொட்டி நடைபெறும் போராட்டங் களின் தன்மைகள், திட்டமிட்டும் ஒருமுகப் படுத்தப்பட்டும் போராட்டங்களை நடத்த வேண்டியதன் அவசியம், முற்றிவரும் தொழி லாளர் பிரச்சனைகளை சந்திப்பதற்கான வழி முறைகள், வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம், பெண்கள், இளை ஞர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களையும் திரட்டுதல், பிறநாடுகளிலிருந்து வரும் தொழி லாளர்களை திரட்டுதல் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங் களை வலுப்படுத்தல் என முக்கிய அம்சங் களை ஆவணம் முன்வைத்தது.



இதையெல்லாம் நிறைவேற்ற, சம்மே ளனத்தை வலுப்படுத்துவது, பிராந்திய வாரி யாகவும் தொழில் வாரியாகவுமான செயல் பாடுகளை விரிவாக்குவது, உறுதிப்படுத்துவது என கடமைகளை ஆவணம் வலியுறுத்தியது.



வாழ்த்துரைகள்



ஐ.நா.சபையின் தலைமைச்செயலாளர் பான்கிமூன் மற்றும் கியூபா, பொலிவியா, சிரியா, பாலஸ்தீனம், சைப்பரஸ் நாட்டு ஜனாதிபதிகள் வாழ்த்துச்செய்திகளை அனுப்பியிருந்தனர்.



சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐடுடீ), சீனத்தொழிற்சங்க சம்மேளனம் (ஹஊகுகூரு), ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளின் தொழிற்சங்க கூட்டமைப்புகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் உலக அமைப்புகள் மற்றும் உலக அமைதி கவுன்சில் சார்பில் வாழ்த்துரைகள் வழங்கப்பட்டன.



விவாதம்



மாநாட்டு பிரகடனத்தின் மீதான விவாதம், அனைத்து கண்டங்களிலும், அனைத்து நாடுகளிலும் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்தியம்பும் அரங்கமாக இருந்தது. நாடுகளும், மொழிகளும் அமைப்பு களும் வேறுபட்டாலும் நூற்றுக்கு மேற்பட் டோரின் பேச்சுகள், இன்றைய முதலாளித் துவ நெருக்கடி மற்றும் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களின் பொதுத்தன்மையை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.



வேலையின்மை, ஆட்குறைப்பு, ஊதிய வெட்டு, ஓய்வூதியம் பறிப்பு, வேலைநேர அதிகரிப்பு, ஓய்வுபெறும் வயது அதிகரிப்பு, தொழிற்சங்க உரிமை-கூட்டுப்பேர உரிமை பறிப்பு என துவங்கி தொழிற்சங்க தலைவர் கள், ஊழியர்களை சிறைப்படுத்துதல், படு கொலைகள் வரையிலுமான பொதுப்பிரச் சனைகளும், ஆர்ப்பாட்டங்கள்,பேரணிகள், அரங்கவாரி மற்றும் நாடு தழுவிய வேலை நிறுத்தங்கள் ஆகியவற்றுடன் மூன்றுமுறை சர்வதேச கிளர்ச்சி தினங்கள் அனுசரிக்கப் பட்ட விபரங்களும் இந்த பொதுத்தன்மையை வெளிப்படுத்தியது.



சிஐடியுவின் சார்பில் ஏ.கே.பத்மநாபன், எரிசக்திக்கான சர்வதேச தொழிற்சங்க கூட் டமைப்பின் சார்பில் அதன் தலைவரும், சிஐ டியு செயலாளருமான எஸ்.தேவ்ராய் உட்பட இந்தியாவிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் 6 பேர் விவாதத்தில் பங்கேற்றனர்.



பெண் பிரதிநிதிகள் கூட்டம்



உழைக்கும் பெண்களின் ஒருங்கிணைப்பை உலகளாவிய முறையில் வலுப்படுத்தும் நோக் கோடு, பெண் பிரதிநிதிகளின் கூட்டம் தனி யாக நடத்தப்பட்டு, தொடர் நடவடிக்கை களுக்கு திட்டமிடப்பட்டது. மொத்தமுள்ள பிரதிநிதிகளில் பெண்கள் 30சதவீதமாகும்.



இதேபோன்று ஆசிய-பசிபிக், ஐரோப்பா, அமெரிக்கா,ஆப்பிரிக்கா என மண்டல வாரி யாக அனைத்து பிரதிநிதிகள் கூட்டங்களும் நடைபெற்றன. பொதுச்செயலாளர் தொகுப்பு ரையோடு பிரகடனம் ஏற்கப்பட்டது.



சம்மேளன விதிகளிலும், நோக்கம் குறித்த முன்னுரை குறிப்பிலும் திருத்தங்கள் முன்மொழியப்பட்டதை புதிய செயற்குழு இறுதிப்படுத்துவதென முடிவாயிற்று.



புதிய நிர்வாகிகள்



42 உறுப்பினர்கள் கொண்ட தலைமைக் குழுதான் சம்மேளனத்தின் உயரிய அமைப்பு. தலைமைக்குழு தேர்வுக்கு முன் பொதுச்செய லாளராக ஜார்ஜ் மாவ்ரிகோஸின் வேட்புமனு மட்டும் தான் தாக்கலாகியிருந்ததால், அவர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். தலைவ ராக, தற்போதைய தலைவர் முகமது ஷாபான் அசூஸ் அவர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக் கப்பட்டார்.



மேலும், தலைமைக்குழுவிற்காக 40 பெயர்கள் அறிவிக்கப்பட்டன. 40பேர்களை தேர்வு செய்ய வேண்டுமென்றாலும், ரகசிய வாக்குகளை பதிவு செய்யும் முறை அமலாக் கப்பட்டது. 5பேர் கொண்ட நிதி ஆய்வுக் குழுவும் தேர்வு செய்யப்பட்டது. தலைமைக் குழுவில் 5 பேர் பெண்கள்.



இவர்களுடன் தொழில்வாரி கூட்டமைப்பு களின் பொதுச்செயலாளர்களும், மண்டல அலுவலக பொறுப்பாளர்களும் தலைமைக் குழு கூட்டங்களுக்கு அழைக்கப்படுவார்கள். கட்டுமானத் தொழிலுக்கான உலக கூட்ட மைப்பின் பொதுச்செயலாளராகியுள்ள தீ பஞ்சன் சக்கரவர்த்தி இதில் இடம் பெறுகிறார்.



புதிய தலைமைக்குழு கூடி 17துணைத் தலைவர்களையும், 7பேர் கொண்ட செயற் குகுழுவையும் தேர்வு செய்தது. செயற்குழு வில் கியூபாவிலிருந்துள்ள பெண் தோழர் ஓசீரிஸ் ஓவிடோ தொடர்கிறார்.



சிஐடியுவிலிருந்து ஏ.கே.பத்மநாபன் துணைத்தலைவராகவும், எஸ்.தேவ்ராய் செயற்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். ஏஐடியுசியிலிருந்து தலைவர் பிரமோத் கோகோய் துணைத்தலைவராகவும், எச்.மகாதேவன் செயற்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏஐபிஈஏ பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் நிதிக்குழு உறுப்பினராக உள்ளார்.



ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெ ரிக்கா, ஆஸ்திரேலிய கண்டங்களின் 101 நாடு களிலிருந்து பங்கேற்ற 881 பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் புதிய உணர்வோடும் போராட்ட வேகத்தோடும் உணர்ச்சி பொங்க சர்வதேச கீதம், பல மொழிகளிலுமாய் முழங்க, 16வது உலக தொழிற்சங்க மாநாடு சிறப்புற நிறைவு பெற்றது.



முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனங் களுக்கு எதிராக, சுரண்டலற்ற புதிய உலக மெனும் உலக தொழிற்சங்க சம்மேளன முழக் கம், வரும் நாட்களில் வீறுகொண்டு உலக மெங்கும் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கை எங்கும் பிரதிபலித்தது.
source: theekkathirnews.blogspot.com

Sunday, April 24, 2011

CLOSURE OF POST OFFICES

9,797 Post Offices Facing Closure?

Daijiworld Media Network

Kasargod, Apr 23: It is gathered, that the central government has given initiation to a scheme of pruning down the number of post offices in the country. As per the new policy of the government, it believes that a post office every five kms will be sufficient to serve the people. If this policy is implemented, 9,797 post offices will face imminent closure, it is learnt.
            Some post office employees’ organizations have alleged that the government is planning to privatize post offices in rural places, by entrusting their operation to private parties on commission basis. Political parties claim that the ‘Postal and Courier Service Bill-2010’ proposed to be moved in the next session of the parliament, is an effort to privatize postal services in the country.
        Left parties have charged the central government of aiming at providing help to capitalists and mega courier companies through the said measures. They fear that once the above procedures are through, postal services will hit a new low, and thousands of employees of postal department will lose their jobs.


source: aipeup3.blogpsot.com

Friday, April 22, 2011

புத்தகம் பதிக்கும் என்றென்றும் புதுத்தடம்




                   மனித இனத்தின் பரிணாமத்திற்கு முந் தைய உயிரினங்களின் இயற்கைத் தேர்வு காரணம். மனித சமூக வளர்ச்சிக்கு, அனுப வத் தேடலும் அறிவுச் சேகரிப்பும் காரணம். அந்த அறிவுச் சேகரிப்பில் நிகழ்ந்த மிக முக் கியமான ஒரு பரிணாம வளர்ச்சிதான் புத் தகம்.
புத்தகம் என்பது காகிதத் தயாரிப்புத் தொழில் நுட்பமும், அச்சு எந்திரத்தின் பயன் பாடும் இணைந்த ஒன்று மட்டுமே அல்ல. அது புத்தகத்தை எழுதியவருக்கும் வாசிப்ப வருக்கும் இடையே ஒரு அந்தரங்க உறவை உருவாக்குகிறது. புத்தகத்தின் லட்சியம், வெளிப்பாட்டுத் திறன் ஆகியவற்றின் அடிப் படையில் அது இந்த இருவருக்கு இடையே யான உறவாக மட்டும் சுருங்கிவிடுவதில்லை. சமுதாயம் பற்றி அலசுகிறபோது, சமுதாயத் தில் பங்காற்றுகிறபோது அது சமுதாய மாற் றத்திற்கான கருவியாகவும் செயல்படுகிறது.

                           மனிதர்கள் தாங்கள் பார்த்ததையும், புரிந்துகொண்டதையும் சகமனிதர்களுக்கு பகிர்ந்துகொள்கிற மகத்தான தகவல் தொடர்பு என்ற மானுடச் செயல்பாடாக, குகைப் பாறைகளில் கற்களால் செதுக்கிய சித்திரங்களாக பதிவு செய்தனர். அடுத் தடுத்த தலைமுறை வளர்ச்சியில், ஒலிக் குறிகள் ஒருங்கிணைந்த சொற்களும், அந்த சொற்களின் சேர்க்கையில் வாக்கியங்களும் உருவாவதற்கு அந்தப் பாறைச் சித்திரங்கள் தான் அடிப்படையாக அமைந்தன. வாழ்க் கைக்கான போராட்டங்கள், வாழ்க்கையோடு இணைந்த ரசனைகள், வாழ்க்கையை மாற் றும் லட்சியங்கள் ஆகியவை பரிமாறப் பட்டன, பகிர்ந்துகொள்ளப்பட்டன. உண்மை நிகழ்வுகள் பற்றிய உணர்வுகளோடு, எதிர் பார்ப்புகள் இணைந்த கற்பனைகளும் கலந் திட, அங்கே கதை பிறந்தது, கவிதை பிறந் தது, காவியம் பிறந்தது, வரலாறு பிறந்தது. இவற்றையெல்லாம் சிந்தாமல் சிதராமல் சேகரித்துத் தருகிற அட்சயப் பாத்திரமாய் அவதரித்தது புத்தகம்.

                “வாழ்வதற்கு ஒரே ஒரு வாழ்க்கைதான் இருக்கிறது என்று சொல்கிறவர் யாரோ அவர் எந்த ஒரு புத்தகத்தையும் படித்திராத வர்.” -இது புத்தகம் வாசிப்பின் அருமை குறித்துப் பேசிய ஒருவர் எடுத்துக் காட்டிய ஒரு மேற்கோள். ஆம், புத்தக வாசிப்பின் பெருமையை ஒருவர் எவ்வளவுதான் எடுத் துச் சொன்னாலும், தானே விரும்பி புத்த கத்தை எடுத்து வாசிக்கிறபோதுதான் உணர முடியும். புத்தகங்கள் வாசிக்க வாசிக்க வாழ்க் கையின் பல புதிர்கள் கட்டவிழும். மேலும் மேலும் புதிர்களை உடைப்பதற்கான உளியா கக் கேள்விகள் அணிவகுக்கும். அந்தக் கேள்விகளுக்கான பதில்களும் புத்தகங்களி லிருந்தே கிடைக்கும். ஒரு கட்டத்தில் புத்தக வாசிப்பாளர்களிடமிருந்தே புதிய புத்தகங்கள் கிடைக்கும்.
              எல்லாப் புத்தகங்களும் சமுதாய மாற்றத் திற்கு உதவிவிடுவதில்லைதான். பிற்போக் குத்தனமான புத்தகங்கள், வரலாற்றைத் திரித்துச் சொல்லும் புத்தகங்கள் சமுதாயத் தைப் பழங்காலத்திற்குப் பின்னால் திருப்ப முயல்கின்றன. இன்றைய உலகமய, தாராள மய, தனியார்மய யுகத்தின் நவீனச் சுரண்டல் முறைகளை நியாயப்படுத்துகிற புத்தகங்கள் சமுதாயத்தை அப்படியே வைத்துக்கொள்ள முயல்கின்றன. உண்மைகளை உரக்கப்பேசி, மாற்று வழிகளையும் திறந்துவிடுகிற புத்த கங்களோ இப்படிப்பட்ட பின்னுக்கிழுக்கும் புத்தகங்களையும், அப்படியே வைத்திருக்க முயலும் புத்தகங்களையும் மீறி, சமுதாய மாற்றத்திற்கும் முன்னேறிச் செல்வதற்கும் வழிவகுப்பதாக வந்துகொண்டிருக்கின்றன. எந்தப் புத்தகம் எந்த வேலையைச் செய்கிறது என்பதைக் கண்டுணர்கிற பொறுப்பு, படைப் பாளியைப் போலவே படிப்பாளிக்கும் வந்து விடுகிறது.

                        “இப்போதெல்லாம் முன்போல் புத்தகம் படிக்கிற தலைமுறையையே பார்க்க முடிவ தில்லை. எப்போது பார்த்தாலும் டிவி, இன் டெர்நெட் என்று பொழுதைக்கழிக்கிறவர் களாகத்தான் இருக்கிறார்கள்,” என்று பொதுவாக இளந்தலைமுறையினர் பற்றிய

                  குற்றச்சாட்டுகளை சிலர் வீசுகிறார்கள். இதிலே ஓரளவுக்கு உண்மை இருக்கவே செய்கிறது. எனது அன்றாட ரயில் பயணத் தில், இரவு நேரத்தில் பணி முடித்து வீடு திரும்புகிறபோது, உடன் வருகிற சிலர், சென் னையின் பெரிய நிறுவனங்களில் பணிபுரி கிறவர்கள், தங்கள் மடிகளில் மடிக்கணினி களை வைத்துக்கொண்டு ‘பைட்’ ‘ஜீபி’ ‘ரேம்’ என்று கணினிமொழியிலேயே பேசிக் கொண்டு வருகிறார்கள். ‘இன்வெஸ்ட் மென்ட்’ ‘ஷேர்’ ‘செபி’ ‘டிவிடண்ட்’ போன்ற சொற்களும் காதில் விழுகின்றன. இவற்றைத் தாண்டி சமுதாயம் பற்றியோ, அரசியல் பற்றியோ - ஏன் திரைப்படங்கள் பற்றிக்கூட - அவர்கள் பேசிக்கொள்வ தில்லை. சில நேரங்களில் அவர்களைப் பார்க்கிறபோது, உங்கள் இளம் வயதுக்கே உரிய காதல் விவகாரங்கள் இருக்குமே, அதைப் பற்றியாவது பேசுங்களேன் என்று கேட்கலாம் போல இருக்கும். தேர்தல் முடிவு கள் எப்படி இருக்கும், அன்னா ஹசாரே போராட்டம் சரிதானா, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு எவ்வாறு முடியும் என்றெல்லாம் பேசி பொழுதை வீணாக்க விரும்பாதவர்களாக தொடர்ந்து அவர்கள் கணினி தொடர் பாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். தட்டிக்கேட்காத, சுட்டிக்காட்டாத, குத்திக் காட்டாத இப்படிப்பட்ட நவீன அடிமை களைதான் இன்றைய கார்ப்பரேட் வர்க்கம் விரும்புகிறது, இப்படிப்பட்டவர்களைதான் வார்க்கிறது.



இப்படி தங்களது மூளையும் சேர்ந்து ஒடுக்கப்படுவதை எதிர்க்க முடியாதவர் களாக இவர்கள் மடிக்கணிகளுக்குள் சுகமா கச் சுருண்டுகொள்வதற்குக் காரணம் -= இவர்களிடையே புத்தக வாசிப்பு பண்பாடு வேரூன்றாததுதான் என்று அடித்துச் சொல் லலாம். சமுதாய அக்கறை உள்ளவர்கள் அனைவரும் இப்படிப்பட்ட தலைமுறைகள் பிளாஸ்டிக் மோல்டிங் தயாரிப்புகள் போல இறக்கிவிடப்படுவது குறித்து கவலை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்.

                       இன்னொரு பக்கத்தில், இன்றைய தலை முறைகள் எல்லோருமே புத்தகங்களை ஒதுக்கி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை முழுமையாக ஏற்பதற்கு இல்லை. பதிப்பாளர் கள் பலரும் சுட்டிக்காட்டுவது போல, அவர வர் ஆர்வம் சார்ந்த, அவரவர் ஈடுபாடுச் சார்ந்த புத்தகங்களை அவர்கள் தேர்ந் தெடுத்துப் படிக்கவே செய்கிறார்கள். ஊழல் களுக்கு எதிராக ஆவேச உணர்வு வளர்ந் திருக்கிறது என்றால், அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வெளிப் படுத்தியதுபோல் கணிசமான இளைஞர் களுக்கு அரசியல் பங்கேற்பு குறித்த அக் கறை ஏற்பட்டிருக்கிறது என்றால் - அதற்கு இதர பல காரணங்களோடு, அவர்களது புத் தக வாசிப்பிற்கும் தலையாயதொரு பங்கு உண்டு.
                                  இந்த ஆக்கப்பூர்வமான போக்கை வளர்ப் பதற்கு அரசும், மக்கள் இயக்கங்களும் என்ன செய்யப் போகின்றன? புத்தக தயாரிப்பை பொருளாதார ரீதியாக ஒரு பெரும் சவாலாக மாற்றியிருக்கிற காகித விலை உயர்வைக் கட்டுப்படுத்த அடுத்துவதும் அரசு அக்கறை மிகுந்த நடவடிக்கைகளை எடுத்தாக வேண் டும். கிராமங்கள்தோறும் பெயருக்குக் கட்டப் பட்டு மூடியே கிடக்கிற நூலகங்களின் கதவுப் பூட்டுகள் உடைக்கப்பட்டாக வேண்டும். நகரங்களின் நூலகங்களுக்கு, பாகுபாடின்றி அனைத்துப் புத்தகங்களும் வந்து சேர வேண்டும். தேர்ந்தெடுத்துப் படிக்கிற உரிமை வாசகர்களுக்கு உறுதிப்பட வேண்டும்.

                       புத்தக ஈடுபட்டை ஊக்குவிப்பதில்லை. நிச்சயமாக பதிப்பகங்களுக்கும் விற்பனையா ளர்களுக்கும் பங்கிருக்கிறது. பாரதி புத்தக லாயம் ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை யொட்டி ரூ.750 மதிப்புள்ள புத்தகங்களை ரூ.500 செலுத்திப் பெற்றுக்கொள்ளும் திட் டத்தையும், புத்தகங்களுக்கு 50 விழுக்காடு விலைச் சலுகையையும் அறிவித்துள்ளது. சமூக அக்கறையுள்ள மற்ற பதிப்பகங்களும் இப்படிப்பட்ட திட்டங்களை செயல்படுத்த முன் வந்திருக்கக்கூடும்.

                             “அமைதியான ஆனால் நிச்சயமாக உடன்வரும் நண்பர்கள் புத்தகங்களே. எளி தில் நெருங்கக்கூடிய, நம்பகமான ஆலோ சகர்கள் புத்தகங்களே. மிகுந்த பொறுமை வாய்ந்த ஆசிரியர்கள் புத்தகங்களே.” - சார்லஸ் எலியட் கூறிய இந்த கருத்து எவ்வ ளவு உண்மையானது என்பதை புத்தகச் சோலைக்குள் நுழைந்து வருகிறவர்கள் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும். இடர்ப் பாடுகள், சவால்கள், சோதனைகள் பலவற் றையும் எதிர்கொண்டு இந்த நண்பர்களும் ஆலோசகர்களும் ஆசிரியர்களும் நம் இல்லங்களுக்கு மனமுவந்து வரத்தயாராக இருக்கிறார்கள். அவர்களை வரவேற்க வாசற் கதவுகளை விரியத் திறந்து வைப்போம்.

Source: theekkathir.com

Thursday, April 21, 2011

MASSIVE DEMONSTRATION IN FRONT OF DAK BHAWAN, NEW DELHI


CHARTER OF DEMANDS SUBMITTED TO SECRETARY, DEPARTMENT OF POSTS INDEFINITE STRIKE FROM 5TH JULY 2011

As per the call given by the Central JCA (NFPE, FNPO & GDS Unions) a massive demonstration took place in front of Postal Directorate (Dak Bhawan) New Delhi today (20.04.2011). About 1000 Postal & RMS Employees from Delhi Circle participated in the demonstration. After the demonstration a meeting was held in front of Dak Bhawan. Com. D. Kishan Rao, General Secretary, PIII FNPO welcomed the gathering. Com. K. V. Sridharan, General Secretary, P3, NFPE & Leader JCM (Staff Side) presided over the meeting. Com. M. Krishnan, Secretary General, NFPE, Com. D. Theagarajan, Secretary General, FNPO, Com. Giriraj Singh, General Secretary, R3 , NFPE, Com. Ishwar Singh Dabas, General Secretary, P4, NFPE, Com. Pranab Bhattacharjee, General Secretary, Admn. NFPE Com. P. Suresh, General Secretary, R4, NFPE, Com. A. H. Siddique, General Secretary, R4, FNPO Com. Chawan, Dy. General Secretary, Postal Accounts, Com. Rajender Diwakar, Treasurer CHQ GDS addressed the meeting. Com. R. N. Parashar, Asst. Secretary General, NFPE offered vote of thanks.

After the demonstration and meeting, the JCA leaders submitted the joint memorandum to the Secretary, Department of Posts.



CENTRAL JCA MEETING HELD ON 20.04.2011

INTENSIVE CAMPAIGN PROGRAMME PLANNED


JOINT ALL INDIA CONVENTION OF CIRCLE SECRETARIES (NFPE, FNPO, GDS UNIONS)


@ CHENNAI ON 19.06.2011

     As decided in the last meeting, the Central JCA met today (20.04.2011) at New Delhi and reviewed the preparations so far made for making the agitational programmes a grand success. JCA leaders are very much impressed with the large scale participation of employees in the demonstration held in front of Dak Bhawan on 20.04.2011. The Central JCA congratulated the employees of Delhi Circle for making the programme a grand success. JCA also congratulated the Postal & RMS employees including GDS through out the country for effectively implementing the programme of demonstration and submission of memorandum programme in all circles and Divisions.

After detailed discussion the Central JCA decided to intensify the campaign programmes by reaching out to each and every employee. The following decisions are taken.

1. The strike from July 5th will be indefinite.

2. Under no circumstances the strike will be deferred or withdrawn, unless a favourable settlement on major demands takes place, especially on policy offensives.

3. Joint State/Circle level convention of Divisional secretaries of JCA (NFPE, FNPO, GDS Unions) will be held in the month of May 2011. Dates of the Circle level conventions finalized will be published in the websites within two days.


4. An All India Joint convention of all Circle Secretaries of NFPE, FNPO and GDS Unions of all Circles will be held at Chennai (Tamilnadu) on 19.06.2011 (19th June 2011) Sunday. All Circle Secretaries should attend the All India convention without fail. Up and down tickets should be booked immediately. Delegate fee is Rs.600/- (Rs. Six hundred only) per head. The Reception Committee will make all arrangements for one day stay (accommodation) and food. Com. D. Theagarajan, Secretary General FNPO and Com. K. V. Sridharan, General Secretary P3 NFPE and Leader JCM staff side will be in charge of the reception committee.


5. All out effort should be made by all Circle/Divisional Secretaries to make the 25th May 2011 mass Dharna a grand success. Similarly the joint Circle Conventions should also be made grand success by the JCA leaders

Source: nfpe.blogspot.com

Tuesday, April 19, 2011

F.No. 141 1/2010-JCA2


Government of India

Ministry of Personnel, Public Grievances and Pensions

(Department of Personnel 86 Training)

North Block, New Delhi
Dated the 18" April, 2011
OFFICE MEMORANDUM
Subject: Revision of Stitching Charges.


The undersigned is directed to say that based on a demand raised by the Staff Side, in National Council (JCM), the question of revising the Stitching Charges of Uniforms, supplied to Common Categories of employees (Multi-Tasking Staff - erstwhile Group 'D' posts of Peon, Daftry, Jamadar, Junior Gestetner Operator, Frash, Chowkidar, Safaiwala, Mali etc. and Staff Car Drivers, Dispatch Riders etc.) in the Central Secretariat and its Attached and Subordinate Offices, has been examined in consultation with the Ministry of Finance. Consequently, it has been decided to enhance the rates of stitching charges, with effect from 1st April, 2011 thereby modifying the earlier instructions issued vide this Ministry's O.M. No. 14/3/2006-JCA dated 28" September, 2006.

2. The revised rates of stitching charges, with effect from lst April, 2011, will be as under:-

Winter

(1) Buttoned-up-coat and pant -Rs. 750

(2) Over Coat for Staff Car Drivers - Rs. 600

(3) Ladies half-coat -Rs. 600

Summer

(4) Pant (Terricot) - Rs.135

(5) Bush Shirt (Polyvastra) -Rs. 60

(6) Blouse -Rs. 45

(7) Petticoat -Rs. 30

(8) Salwar Kameez - Rs. 90

Protective clothing [for Malis/ Bhistiesl

(9) Pyjama -Rs. 24

(10) Short (Half-Pant) -Rs .60

(11) Shirt (Cotton) -Rs. 45

3. It may please be noted that the reimbursement of Stitching Charges at the-prescribed rates should be done only after the stitched uniforms are produced and are duly stamped, with indelible ink, at an appropriate place on the wrong side of the stitched dress, for identification. A proper record and procedure should be evolved to ensure that the employees produce the stitched uniforms within a reasonable period (say one month) after the cloth is supplied to them.


4. This issues with the concurrence of Department of Expenditure vide ID No. 5(1)/E.I1 (A)/2009 dated 08.04.201 1.

Hindi version will follow.

Sd/-

(Dinesh Kapila)

Director (JCA)

Courtesy: http://nfpe.blogspot.com/

16th world trade union congress of WFTU at Athens

16th World Trade Union Congress of World Federation of Trade Union, 6th April 2011 to 10th April 2011, Athens, Greece.



16th World Trade Union Congress of World Federation of Trade Union 6th April 2011 to 10th April 2011, Athens, Greece. & Visit to Geneva Head Quarters of United Nations (UN) and International Labour Organization (ILO).


Com. K.K.N.Kutty, Secretary General, Confederation of Central Govt. Employees and Workers

& Com. M.Krishnan, Secretary General, National Federation of Postal Employees (NFPE) attended. About 900 leaders/delegates from 120 countries attended the WFTU Congress.

Saturday, April 9, 2011

Anna Hazare ended his hunger strike after 4 days(98 hours)

 New Delhi: After single-handedly provoking a people's revolution, 72-year-old social activist Anna Hazare, who launched what he calls "India's second freedom struggle," ended his hunger strike today.

It took Mr Hazare almost five days of fasting to accomplish every point of an agenda that seemed preposterously ambitious when the week began. Till India pitched in, expressing its solidarity with rallies around Mr Hazare's cause - to force the government to introduce a new tough law to combat corruption, and to ensure that politicians alone are not entrusted with its conception.
The government has agreed that a committee will be set up with five representatives of civil society, including Mr Hazare, and five ministers. Mr Hazare said this is a "victory of the people". Finance Minister Pranab Mukherjee will be the Chairman of the panel; and former Law Minister Shanti Bhushan, who has been picked by Mr Hazare, will be the co-Chairman.
source: ndtv.com

Friday, April 8, 2011

ஹஸாரேவுக்கு பெருகுகிறது ஆதரவு

புது தில்லி, ஏப்.7: ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதியும் சமூக சேவகருமான அண்ணா ஹஸாரேவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு பெருகி வருகிறது.

இதனிடையே, லோக்பால் திருத்த மசோதாவை வடிவமைக்க கூட்டுக்குழு நியமனம் செய்வது தொடர்பாக மத்திய அரசுடன் ஹஸாரேயின் பிரதிநிதிகள் இரு சுற்றுப் பேச்சு நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.
        அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க லோக்பால் என்ற அமைப்பை உருவாக்க மசோதா கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி ஹஸாரே தில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அவரது பிரதிநிதிகளாக சுவாமி அக்னிவேஷ், அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் மத்திய அமைச்சர் கபில் சிபிலை புதன்கிழமை நள்ளிரவு இரண்டு முறை சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது லோக்பால் மசோதாவை திருத்தியமைப்பதற்காக உருவாக்கப்படும் கூட்டுக் குழுவில் அரசு தரப்பு, சமூக அமைப்புகள் ஆகியன சார்பில் சரிசமமான எண்ணிக்கையில் பிரதிநிதிகளை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கையை அரசு தரப்பினர் ஏற்றுக்கொண்டனர்.

ஆனால் அந்த குழுவுக்கு ஹஸாரேயை தலைவராக நியமிக்க முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. எனவே பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. ஹஸாரே உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் ஆலோசனை நடத்திவிட்டு வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், கூட்டுக் குழு அமைப்பது பற்றி அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும் என்றார். இந்த நிலையில் இந்த குழுவுக்கு பிரதமர் அல்லது மத்திய நிதி அமைச்சர் தலைவராக நியமிக்கப்படக்கூடும் என அரசு தரப்பு தெரிவித்ததாக விஷயமறிந்த வட்டாரங்கள் கூறின.
தொடர் உண்ணாவிரதம் குறித்து ஹஸாரே செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
என்னால் நிச்சயம் ஒருவாரம் நலமுடன் இருக்க முடியும். எனது உடல்நிலை குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாம். சிறிதளவு மட்டுமே பலவீனமாக உணர்கிறேன். 1.5 கிலோ எடை குறைந்துவிட்டது. கடவுள் என்னுடன் இருக்கிறார். அவர் காப்பாற்றுவார்.

மிரட்டல்கள் இருந்தாலும் உண்மையை ஒருபோதும் கைவிடக்கூடாது. 12 நீதிமன்ற வழக்குகளை நான் சந்தித்திருக்கிறேன், எனக்காக பணம் வாங்காமல் வாதாடும் வழக்கறிஞர்கள் உள்ளனர். உண்மையை ஒருபோதும் நாம் கைவிடக்கூடாது.



முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒருவர்தான் இந்த கூட்டுக் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்படவேண்டும். கூட்டுக்குழுவுக்கு தலைவராக இருக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அப்படி கூட்டுக் குழு அமையும்பட்சத்தில் அதில் உறுப்பினராக இருக்க விரும்புகிறேன்.
லோக்பால் மசோதாவை திருத்தியமைப்பதற்காக அமைக்கப்படும் எந்த குழுவிலும் தான் இடம் பெறவேண்டுமானால், அந்த குழுவில் சோனியா காந்தியும் உறுப்பினராக இடம் பெறவேண்டும் என்றார் அவர்.



      ஆதரவு தெரிவிக்க மிஸ்டுகால் ஹஸாரேயின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 022 - 61550789 என்கிற செல்போன் எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்கும்படி அவரது ஆதரவாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யார் இந்த ஹசாரே?


 ""சாவை கண்டு நான் பயப்படவில்லை. நான் இறந்து விட்டால், எனக்காக அழுவதற்கு, குடும்பம் என்று யாரும் இல்லை. நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே, போராடி வருகிறேன். ஊழலுக்கு எதிராக இரண்டாவது சுதந்திர போராட்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். அரசு துறைகளில் வெளிப்படையான அணுகுமுறை அவசியம். நேர்மையான அதிகாரிகளை, அடிக்கடி இடமாற்றம் செய்வது தடுக்கப்பட வேண்டும். இந்த நோக்கங்கள் நிறைவேறும் வரை, என் போராட்டத்தை தொடர்வேன்!'' - அன்னா ஹசாரே



* அன்னா ஹசாரே, மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், 1940ல் பிறந்தவர்.



* இந்திய ராணுவத்தில் டிரைவராக பணிபுரிந்தவர். தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போது எல்லாம், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, ஆச்சார்யா வினோபா பாவே போன்றோரின் புத்தகங்களை படித்தார். இதனால், இவருக்கு சமூக சேவை செய்வதிலும், அஹிம்சையிலும் ஆர்வம் ஏற்பட்டது.



* 1978ல், ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, முழு நேர சமூக சேவகரானார்.



* ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, போராட்டங்களை நடத்தினார். இவரின் பெரும்பாலான போராட்டங்கள், ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிரானதாக அமைந்தது.



* இவரின் தீவிரமான போராட்டம் காரணமாக, 1995-96ல், அப்போதைய மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியாக இருந்த சிவசேனா - பா.ஜ., அரசை சேர்ந்த ஊழல் அமைச்சர்கள் இரண்டு பேர் நீக்கப்பட்டனர்.



* 2003ல், ஹசாரேயின் போராட்டம் காரணமாக, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த நான்கு பேருக்கு எதிராக, மகாராஷ்டிரா அரசு, விசாரணை கமிஷன் அமைத்தது.



* இவரின் போராட்டங்களால் கடும் அதிருப்தியடைந்த சரத் பவார், பால் தாக்கரே போன்ற அரசியல்வாதிகள், அவரை "பிளாக் மெயில் மனிதர்' என கடுமையாக விமர்சித்தனர்.



* தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்.



* ஹசாரேயின் பெரும்பாலான போராட்டங்கள், உண்ணாவிரத போராட்டங்களாகவே இருந்தன.



* ஊழலுக்கு எதிரான இவரின் போராட்டங்களுக்கு மேதா பட்கர், கிரண் பேடி, ஆன்மிக தலைவர்கள் சுவாமி ராம்தேவ், சுவாமி அக்னிவேஷ் போன்றோர், தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.



* இவருக்கு சொத்து இல்லை; வங்கியில் ஒரு பைசா கூட சேமிப்பும் இல்லை என்பது பெரும்பாலானோருக்கு தெரியாத விஷயம்.



* அகமது நகர் மாவட்டம், சித்தி நகர் கிராமத்தில் யாதவபாபா கோவில் அருகே உள்ள, பத்துக்கு பத்து சதுரடி கொண்ட ஒரு சிறிய அறை தான் இவரது வசிப்பிடம்.



* இந்த நூற்றாண்டிலும் இப்படி ஒரு மனிதரா என, ஆச்சர்யப்பட வைக்கும் இவர் தான், தற்போது, ஊழலுக்கும், ஊழல்வாதிகளுக்கும் எதிராக, மிகப்பெரிய புரட்சியை நிகழ்த்தி வருகிறார்.



நாட்டை அவமதித்த ஊழல்கள்



1975ம் ஆண்டு: லாட்டரி ஊழல்

1990-99ம் ஆண்டு:போபர்ஸ் ஊழல்

1992ம் ஆண்டு: ஹர்ஷத் மேத்தா ஊழல்

1993ம் ஆண்டு: ஹவாலா

1996ம் ஆண்டு: பீகார் கால்நடை தீவன ஊழல். முன்னாள் அமைச்சர் சுக்ராம் மீதான டெலிகாம் ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது.

1999 முதல் 2001 வரை பங்கு சந்தை புரோக்கர் கேதன் பரேக் செய்த பங்கு சந்தை ஊழல் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது. 2008ல் இவர் தண்டிக்கப்பட்டார்.

2001ம் ஆண்டு: ராணுவத்துறையில் நடந்த ஆயுத பேர ஊழலை தெகல்கா வார இதழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இதில், முன்னாள் அமைச்சர் பங்காரு லட்சுமணன், ஜெயா ஜெட்லி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

2003ம் ஆண்டு: போலி முத்திரைத்தாள் ஊழல் (அப்துல் கரீம் தெல்கி)

2005ம் ஆண்டு: உணவுக்காக எண்ணெய் தொடர்பான முன்னாள் அமைச்சர் நட்வர் சிங் சம்பந்தப்பட்ட ஊழல்.

2009ம் ஆண்டு: பல்வேறு இடங்களில் சொத்துக்களை குவித்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மீதான 4,000 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது.

2010ம் ஆண்டு: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல்

Payment of Dearness Allowance to Gramin Dak Sevaks (GDS)

Govt. Orders on Payment of D.A to Gramin Dak Sevaks (GDS) at revised rates with effect from 01-01-2011.
NO. 14-01/2011-PAP

GOVERNMENT OF INDIA

MINISTRY OF COMMUNICATIONS & IT
DEPARTMENT OF POSTS
(ESTABLISHMENT DIVISION)
DAK BHAVAN, SANSAD MARGNEW DELHI,
THE 5th April,2011



To

All Chief Postmasters General,

All Postmaster General,

All Directors/Dy. Director of Accounts (Postal).


Subject: Payment of Dearness Allowance to Gramin Dak Sevaks (GDS) at revised rates with effect from 01-01-2011.


Sir/Madam,
Consequent upon grant of another installment of dearness allowance with effect from 01-01-2010 to Central Government Employees, vide Government of India, Ministry of Finance, Department of Expenditure O.M. No.1(2)/2011-EII(B), dated the 24th March,2011, the Gramin Dak Sevaks (GDS), have also become entitled to the payment of dearness allowance on basic TRCA at the revised rate with effect from 01-01-2011. It has, therefore, been decided that the dearness allowance payable to the Gramin Dak Sevaks shall be enhanced from the existing rate of 45% to 51%, on the basic Time Related Continuity Allowance, with effect from 1ST January, 2011.


2. The additional installment of dearness allowance payable under this order, shall be paid in cash to all Gramin Dak Sevaks. The payment of arrears of dearness allowance for the month of January and February, 2011, shall not be made before the date of disbursement of TRCA of March, 2011.

3. The expenditure on this account will be debitable to the Sub Head 'Salaries' under the relevant head and should be met from the sanctioned grant.

4. This issues with the concurrence of Integrated Finance Wing vide their Diary No. 01/FA/11/CS, dated 05.04.2011

Yours faithfully

Sd/-
(RAJ KUMAR)
DIRECTOR(ESTT)
TELE:23096036/23036793


FAX:011-23096007/23096036

Tuesday, April 5, 2011

WORLD FEDERATION OF TRADE UNIONS (WFTU)

WORLD FEDERATION OF TRADE UNIONS (WFTU)

WORLD CONGRESS AT ATHENS (GREECE)
FROM 2011 APRIL 6TH TO 10TH

Com. M. Krishnan, Secretary General, NFPE attending
 
The World Congress of the World Federation of Trade Unions (WFTU) will be held at Athens (Greece) from 6th to 10th April 2011. Com. K. K. N. Kutty, Secretary General, Confederation of Central Government Employees and workers & Com. M. Krishnan, Secretary General, NFPE are attending the Conference.

WFTU is the strongest united movement of the World Trade Unions, with Head quarters at Athens, the capital city of Greece. It is known as the democratic progressive Trade union movement of the world. WFTU was formed in the year 1945 and now about 220 trade unions from 120 countries are affiliated to it. WFTU is a member of ILO. General Secretary is Com. George Mavrikoz.

Monday, April 4, 2011

SAVE POSTAL DEPARTMENT


STOP MCKENSY DICTATED REFORMS

INDEFINITE STRIKE FROM 5TH JULY 2011

-M.Krishnan, Secretary General ,NFPE
details in nfpe.blogspot.com