CLICK TO VISIT LATEST POSTS

Monday, January 7, 2013

எல்.ஐ.சியில் உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு

எல்.ஐ.சியில் உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வுக்கு பாளையில் இலவச பயிற்சி வகுப்புகள் நேற்று ஆரம்பமானது.
டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் எல்.ஐ.சியில் உதவியாளர் (எஸ்.சி, எஸ்டி வகுப்பினருக்கு மட்டும்) பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பாளை ராஜேந்திர நகர் சரோஜ் நினைவகத்தில் நேற்று ஆரம்பமானது.
காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்ட தலைவர் மதுபால் தலைமை வகித்தார். எல்.ஐ.சி முதுநிலை கோட்ட மேலாளர் கருப்பையா பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்தார்.
இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் கோபாலன், செயலாளர் கிருஷ்ணன், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பாஸ்கரன், காப்பீட்டு கழக ஊழியர் சங்க பொது செயலாளர் முத்துக்குமாரசாமி உட்பட பலர் பேசினர்.
இந்த பயிற்சி வகுப்புகள் வரும் பிப்ரவரி மாதம் 16ம் தேதி வரை சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நடத்தப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பில் சேர வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
எல்.ஐ.சியில் 84 உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 17ம் தேதி நடக்கிறது. பட்டப் படிப்பு முடித்தவர்கள் இத்தேர்வில் பங்கேற்கலாம்.