CLICK TO VISIT LATEST POSTS

Friday, February 11, 2011

உலகைப் புரட்டிய புத்தகங்கள்



பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான சமர்க்களமாக விளங்கிய பதினெட்டாம் நூற்றாண்டின் புதுமைப் படைப்பு இந்த புத்தகமாகும். 1776ல் நிகழ்ந்த அமெரிக்க புரட்சிக்கும், 1789ல் நிகழ்ந்த பிரெஞ்சு புரட்சிக்குமான விதையாக இந்த புத்தகம் விளங்கியதாக சரித்திர ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சிக்மன் ப்ராய்டின் ‘கனவுகளின் விளக்கம்
மனித மனம் பற்றிய ஆழ்ந்த பல விஷயங்களை இந்த புத்தகம் ஆய்வு செய்கிறது. மனிதனின் நிறைவேறாத ஆசைகளின் பிரதிபலிப்பே கனவுகள். இது மனிதனை செயலுக்குத் தூண்டிவிடும் சக்தி கொண்டது, என இப்புத்தகம் கூறுகிறது.
சார்லஸ் டார்வினின் ‘உயிரினங்களின் தோற்றம்’
1859ல் இது வெளியிடப்பட்ட காலம் வரை உயிரினங்களின் தோற்றம் குறித்து மத கட்டுக்கதைகளே விதவிதமான விளக்கங்களைக் கூறிவந்தன. ஆனால் உயிரியல் மரபில் ஒரு புரட்சிகர சிந்தனை மாற்றத்திற்கே விதைபோட்டு, அதுவரையான உலக பார்வையினையே இந்நூல் மாற்றியமைத்துவிட்டது.
காரல்மார்க்ஸ் - பிரடெரிக் எங்கல்சின் உலக கம்யூனிஸ்ட் அறிக்கை
காரல்மார்க்ஸ், பிரடெரிக் எங்கல்ஸ் ஆகியோரின் கூட்டுப்படைப்பு உலக கம்யூனிஸ்ட் அறிக்கை ஆகும். ஒரு புதிய சோசலிஸ்ட் உலக கண்ணோட்டத்தை மனித குலத்திற்கு அளித்த இப்புத்தகம் நான்கு பகுதிகளைக் கொண்டதாகும்.
‘உலகத்தை மாற்று’ என மனித குலத்திற்கு அறைகூவல் விட்டபடியே வெளிவந்த இந்த புத்தகம் உண்மையில் கோடானு கோடி மக்களின் வாழ்வையே மாற்றியமைத்துக் காட்டியது.
காரல் மார்க்சின் ‘மூலதனம்’
மார்க்ஸ் 1844 முதல் 1883 வரை 40 ஆண்டுகளும் பிரடெரிக் எங்கல்ஸ் 11 ஆண்டுகளும் பாடுபட்டு உழைத்த உழைப்பின் விளைச்சல்தான் மூலதனம் புத்தகம் ஆகும். இதன் முதல் பாகம் 1867ல் மார்க்சாலும் இரண்டாம், மூன்றாம் பாகங்கள் மார்க்சின் மறைவுக்குப்பின்னர் முறையே 1885-1894 ஆண்டுகளில் பிரடெரிக் எங்கல்சாலும் வெளியிடப்பட்டன.